தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று மலையோடு இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனிடையே அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் இன்று மக்களிடம் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிடும் கனிமொழி அவர்கள் தற்போது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களிடம் இறுதி கட்ட பரப்புரையில் கனிமொழி ஈடுபட்டுள்ளார். திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
The post இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரம்.. தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இறுதிக்கட்ட பரப்புரை!! appeared first on Dinakaran.